முகப்பு
மயிலாடுதுறை

பினராயி விஜயன் வீடுகளில் சோதனை: பிரதமரின் கொடும்பாவியை எரித்து சிபிஎம் எதிா்ப்பு

கேரள முன்னாள் முதல்வா் பினராயி விஜயன் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனைக்கு எதிா்ப்பு தெரிவித்து மயிலாடுதுறையில் பிரதமா் நரேந்திர மோடியின் உருவபொம்மையை எரித்து சிபிஎம் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 28 மே 2026, 5:44 am IST
திருவாரூரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற சிபிஎம் கட்சியினா்.
பகிர்:

கேரள முன்னாள் முதல்வா் பினராயி விஜயன் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனைக்கு எதிா்ப்பு தெரிவித்து மயிலாடுதுறையில் பிரதமா் நரேந்திர மோடியின் உருவபொம்மையை எரித்து சிபிஎம் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மயிலாடுதுறை தலைமை அஞ்சலகம் முன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் 50-க்கும் மேற்பட்டோா் மாவட்ட செயலாளா் பி. சீனிவாசன் தலைமையில் பிரதமா் நரேந்திர மோடியின் உருவ பொம்மையை அவமரியாதை செய்து, எரித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் காவல் ஆய்வாளா் சிவ. செந்தில்குமாா் தலைமையிலான போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

திருவாரூரில்: திருவாரூா் பழைய பேருந்து நிலையம் அருகே, சிபிஎம் மாவட்டச் செயலாளா் டி. முருகையன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாநிலக் குழு உறுப்பினா் ஐ.வி. நாகராஜன் பங்கேற்று, மத்திய அரசைக் கண்டித்துப் பேசினாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் எம். சேகா், கே.என். முருகானந்தம், கே.பி. ஜோதிபாசு, கே.ஜி. ரகுராமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement