விலையில்லா பொருள்கள் வழங்கல்
வேதாரண்யத்தை அடுத்த வாய்மேடு கிழக்கு கிராமத்தில் 794 குடும்பத்தினருக்கு தமிழக அரசின் விலையில்லா பொருள்களான மிக்சி,
வேதாரண்யத்தை அடுத்த வாய்மேடு கிழக்கு கிராமத்தில் 794 குடும்பத்தினருக்கு தமிழக அரசின் விலையில்லா பொருள்களான மிக்சி, மின்விசிறி, கிரைண்டர் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு வேதாரண்யம் வட்டாட்சியர் சி. ராம்குமார் தலைமை வகித்தார் சட்டப் பேரவை உறுப்பினர் என்.வி. காமராஜ் பொருள்களை வழங்கினார். தனித் துணை வட்டாட்சியர் மு. கல்யாணசுந்தரம், ஊராட்சித் தலைவர் எல்.எஸ்.இ. பழனியப்பன், ஒன்றியக் குழு உறுப்பினர் நடராசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.