நாகப்பட்டினம்

செம்பனார்கோயில் ஒன்றிய வளர்ச்சிப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு

DIN

நாகை மாவட்டம், செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெறும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியம், திருக்களாச்சேரி ஊராட்சியில் பிரதம மந்திரி கிராம சாலை மேம்பாட்டுத் திட்டம் மூலம் ரூ. 1.35 லட்சம் மதிப்பில் நடைபெறும் திருக்களாச்சேரி - பாலூர் சாலை மேம்பாட்டுப் பணி, பசுமை வீடுகள் கட்டும் திட்டம் மற்றும் பிரமத மந்திரி நினைவு குடியிருப்புத் திட்டம் சார்பில் ரூ. 3.80 லட்சம் மதிப்பில் நடைபெறும் வீடுகள் கட்டும் பணி ஆகியவற்றை ஆட்சியர் ஆய்வு செய்தார்.
ஊரக வேலை உறுதித் திட்டம் மூலம் இலுப்பூர் ஊராட்சியில் நடைபெறும் பண்டாரவாடை குளம் தூர்வாரும் பணி, திருவிளையாட்டம் ஊராட்சியில் ரூ. 10 லட்சம் மதிப்பில் நடைபெறும் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவுக் கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டும் பணி, ஈச்சங்குடியில் நடைபெறும் கடலி நாயக்கர் குளம் தூர்வாரும் பணி ஆகியவற்றை ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மஞ்சுளா, தியாகராஜன், வட்டாட்சியர் முருகேசன் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலின் இடைக்கால ஜாமீன் விவகாரம்: உச்சநீதிமன்றம் நாளை உத்தரவு

மெய்க்கண்ணுடையாள்அம்மன் கோயில் திருவிழாவில் பக்தா்கள் நோ்த்திக்கடன்

இளைஞா் மீது தாக்குதல் 3 போ் மீது வழக்கு

சிறைச்சந்தையில் தவற விட்ட பணப்பை ஆந்திர மாநில தம்பதியரிடம் ஒப்படைப்பு -கைதிக்கு பாராட்டு

மேம்பாலத்தை சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க பாஜக வலியுறுத்தல்

SCROLL FOR NEXT