முகப்பு
நாகப்பட்டினம்

பள்ளி மாணவர்கள் 2 பேரை காணவில்லை எனப் புகார்

மயிலாடுதுறையில் பள்ளி மாணவர்கள் இருவரை காணவில்லை என போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம்

பள்ளி மாணவர்கள் 2 பேரை காணவில்லை எனப் புகார்

மயிலாடுதுறையில் பள்ளி மாணவர்கள் இருவரை காணவில்லை என போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:04 PM
பகிர்:

மயிலாடுதுறையில் பள்ளி மாணவர்கள் இருவரை காணவில்லை என போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை கூறைநாடு பெரிய பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த முகம்மது ரபீக் மகன் எம். அப்துல் மஜீது (14). மயிலாடுதுறையில்  உள்ள தனியார் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வருகிறார். கூறைநாடு சின்னப் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த முகம்மது மைதீன் மகன்  எம். முகம்மது இஜாஸ் (15). இவர் மயிலாடுதுறையில்  உள்ள தனியார் பள்ளியில் 10 -ஆம் வகுப்புப் படித்து வருகிறார். முகம்மது ரபீக், முகம்மது மைதீன் ஆகிய இருவரும் வெளிநாடுகளில் வேலைப் பார்த்து வருகின்றனர். தாயின் பராமரிப்பில் இருந்து வந்த அப்துல் மஜீது, முகம்மது இஜாஸ் நண்பர்களாகப் பழகி வந்துள்ளனர்.
இந்நிலையில், மாணவர்கள் இருவரும் செவ்வாய்க்கிழமை மாலை  டியூசனுக்கு செல்வதாக கூறிவிட்டு புத்தகப் பையுடன் சென்றவர்கள், மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர் மயிலாடுதுறை காவல்  நிலையத்தில் புகார் தெரிவித்ததன் அடிப்படையில் போலீஸார் மாயமான மாணவர்கள் 2 பேரையும்   தேடிவருகிறனர்.

முழு கட்டுரையைப் படிக்க →