பிரிட்டானியாவுக்கு ரூ.6.37 கோடி வரி செலுத்த ஜிஎஸ்டி அதிகாரிகள் நோட்டீஸ்!
ஜிஎஸ்டி அதிகாரிகள், பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸுக்கு ரூ.6.37 கோடி வரி செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
புதுதில்லி: ஜிஎஸ்டி அதிகாரிகள், பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸுக்கு ரூ.6.37 கோடி வரி செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
பேக்கரி உணவு நிறுவனமான பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் திங்கள்கிழமை அன்று தானேயில் உள்ள சிஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் ஆணையர் அலுவலகத்திலிருந்து இந்த உத்தரவைப் பெற்றதாக தெரிவித்தனர்.
வழங்கப்பட்ட பொருட்களின் தவறான வகைப்பாடு காரணமாக வரி செலுத்தவில்லை என்று தெரிவித்து, 2020-21 நிதியாண்டு முதல் 2023-24 நிதியாண்டு வரை ஜிஎஸ்டி சட்டத்தின் பிரிவு 74 இன் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இருப்பினும், இது நிறுவனத்தின் நிதி, செயல்பாடுகள் அல்லது பிற செயல்பாடுகளில் எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று குட் டே, டைகர், நியூட்ரிசாய்ஸ் மற்றும் மேரிகோல்ட் போன்ற பிரபலமான பிராண்டுகளை வைத்திருக்கும் பிரிட்டானியா தெரிவித்துள்ளது.
இந்த உத்தரவு மேல்முறையீடு செய்யத்தக்கது மற்றும் ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் கிடைக்கும் சட்ட தீர்வுகளைப் பயன்படுத்துவது உள்ளிட்ட தேவையான நடவடிக்கைகளை நிறுவனம் எடுக்கும் என்று பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் தெரிவித்துள்ளது.
GST authorities have issued a demand notice of Rs 6.37 crore to Britannia Industries.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.