நாகப்பட்டினம்

அகில இந்திய தடகளப் போட்டிக்கு சீர்காழி மாணவர் தேர்வு

DIN

அகில இந்திய தடகளப் போட்டிக்கு சீர்காழி பள்ளி மாணவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சீர்காழி ச.மு. இந்து மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு படித்து வரும் மாணவர் வீ. சஞ்சய்குமார் அண்மையில் திருச்சி தொட்டியத்தில் நடைபெற்ற 60-ஆவது மாநில குடியரசு தின தடகளப் போட்டிகளில் 17 வயதுக்குள்பட்டோர் பிரிவில் 400 மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்று வெற்றி பெற்று, மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற உள்ள (எஸ்கூல்எப்ஐ) அகில இந்திய பள்ளிகளுக்கு இடையிலான தடகளப் போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அகில இந்திய தடகளப் போட்டியில் 400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் பங்கேற்கிறார். தேர்வாகியுள்ள மாணவர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் எஸ். முரளிதரன், உடற்கல்வி ஆசிரியாகள் எஸ். பாரி, டி. முரளி, பி. மார்கண்டன் உள்ளிட்டோரை பள்ளி முன்னாள் செயலர் எஸ்.பாலசுப்ரமணியன், செயலர் எஸ். ராமகிருஷ்ணன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் எம். கபாலி, நாகை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஏ. கஷ்தூரிபாய், முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் மதிவாணன், அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்ட உதவித் திட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார், மயிலாடுதுறை கல்வி மாவட்ட அலுவலர் எம். வேதரத்தினம், பள்ளியின் தலைமையாசிரியர் எஸ். அறிவுடை நம்பி உள்ளிட்டோர் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்: ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை!

இ-பாஸ் நடைமுறை: இணையதளம் தயார்; இன்று மாலை நெறிமுறைகள் வெளியீடு

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் சிசோடியா மனு தாக்கல்!

SCROLL FOR NEXT