முகப்பு
நாகப்பட்டினம்

நீர்த்தேக்கத் தொட்டி கட்டுமானப் பணி: தவறி விழுந்த தொழிலாளி சாவு

வேதாரண்யம் அருகே நீர்த்தேக்கத் தொட்டி கட்டுமானப் பணியின்போது தவறி விழுந்த தொழிலாளி ஒருவர் புதன்கிழமை உயிரிழந்தார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:08 PM
பகிர்:

வேதாரண்யம் அருகே நீர்த்தேக்கத் தொட்டி கட்டுமானப் பணியின்போது தவறி விழுந்த தொழிலாளி ஒருவர் புதன்கிழமை உயிரிழந்தார்.
வேதாரண்யத்தை அடுகேயுள்ள வாய்மேடு மேற்கு பகுதியில் உள்ள விநாயகர் கோயில் அருகே ஊரக வளர்ச்சித்துறை சார்பில் மேற்கொள்ளப்படும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டும் பணி நடைபெற்று வருகிறது. சுமார் 40 அடி உயரமுள்ள இந்த தொட்டியின் கட்டுமானத்துக்கு தாங்கல் கொடுக்கப்பட்ட  மரங்களை அகற்றும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த கீழ்வேளூர் அருகே பெருஞ்சாத்தங்குடியைச் சேர்ந்த பாப்பையன் மகன் செல்லப்பா(35)தவறி விழுந்து காயமடைந்தார். உடனடியாக அவர் மீட்கப்பட்டு திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பலனின்றி செல்லப்பா புதன்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து வாய்மேடு காவல் நிலையப் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →