நாகப்பட்டினம்

ஏவிசி கல்லூரி மாணவர்களுக்குப் பாராட்டு

DIN

நாகை, திருவாரூர் மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளுக்கிடையேயான  கலை, இலக்கியப் போட்டிகளில் மயிலாடுதுறை ஏவிசி கல்லூரி மாணவர்கள் ஒட்டு மொத்தப் பரிசுகளையும் பெற்றனர்.
நாகப்பட்டினம் பிரைம் கல்வி நிறுவனங்கள், மிட்டவுன் ரோட்டரி சங்கம்  ஆகியவை  இணைந்து நடத்திய நாகை, திருவாரூர் மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளுக்கிடையேயான கலை, இலக்கியப் போட்டிகள் அண்மையில் நாகையை  அடுத்த கீழ்வேளூரில் நடைபெற்றது.
இப்போட்டியில் பங்கேற்ற மயிலாடுதுறை ஏவிசி கல்லூரி மாணவர்கள் பேச்சுப்போட்டி, பட்டிமன்றம்,  நடனம் மற்றும்  குழுப் போட்டிகளில் வெற்றி பெற்று போட்டிக்கான சுழற்கேடயத்தைப் பெற்றுள்ளனர்.  
இதைத் தொடர்ந்து போட்டிகளில் வெற்றிபெற்ற கல்லூரி மாணவர்களுக்கு  வியாழக்கிழமை கல்லூரியின்  செயலர் கே. கார்த்திகேயன், முதல்வர் ஆர். நாகராஜன், தமிழ்த்துறை தலைவர்  சு. தமிழ்வேலு, நுண்கலை மன்ற ஒருங்கிணைப்பாளர்  க.அமலன்ராபர்ட் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT