நாகப்பட்டினம்

திருவாலி தொடக்கப் பள்ளியில் எம்எல்ஏ ஆய்வு

DIN

திருவாலி ஊரட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் புதிதாக மழைநீர் சேகரிப்பு அமைப்பு மற்றும் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளதை எம்எல்ஏ பி.வி.பாரதி வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.
 இப்பள்ளியில் சீர்காழி சட்டப்பேரவை  உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில்  ரூ.4.60 லட்சம் செலவில் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், மழை நீர் சேகரிப்பு அமைப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதை எம்எல்ஏ பி.வி.பாரதி பார்வையிட்டார். அப்போது, தனியார் கட்டடங்கள் மற்றும் வீடுகளிலும் மழை நீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, அதிமுக ஒன்றிய இளைஞரணி செயலாளர் திருமாறன், மங்கைமடம் ஊராட்சி செயலாளர் நடராஜன், முன்னாள் பொருளாளர் அமிர்தலிங்கம் உள்ளிட்டோர்
உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

SCROLL FOR NEXT