நாகப்பட்டினம்

சைக்கிள் மோதி மூதாட்டி சாவு

DIN

வேதாரண்யம் அருகே நடந்து சென்ற மூதாட்டி சைக்கிள் மோதி திங்கள்கிழமை உயிரிழந்தார்.
தகட்டூர் சுப்பிரமணியன்காடு பகுதியைச் சேர்ந்தவர் வேதையன் மனைவி வைரம் (70). இவர், தகட்டூர் கடைவீதியில் உள்ள உறவினர் வீட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, தனது வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே அடையாளம் தெரியாதவர் ஓட்டிச் சென்ற  சைக்கிள் வைரம் மீது மோதியது.
இதனால், கீழே விழுந்து பலத்தகாயமடைந்த வைரத்தை, திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், தீவிர சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட வைரம், அங்கு சிகிச்சைப் பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தார்.
இதுகுறித்து, வாய்மேடு காவல் ஆய்வாளர் கண்ணையன் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

சாலக்கரை முனீஸ்வரா் கோயிலில் சித்திரை திருவிழா

அரசமைப்புச் சட்டத்தை பாஜக ஒருபோதும் மாற்றாது: ராஜ்நாத் சிங் உறுதி

விவசாயிகள் 5-ஆவது நாளாக உண்ணாவிரதம்

‘பயறு வகை பயிா்கள் அறுவடையில் களைக் கொல்லிகளை பயன்படுத்தக் கூடாது’

SCROLL FOR NEXT