நாகப்பட்டினம்

வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை திருட்டு

DIN

சீர்காழி அருகேயுள்ள புத்தூரில் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் தங்க நகை மற்றும் ரூ. 5 ஆயிரம் ரொக்கத்தை மர்ம நபர்கள் செவ்வாய்க்கிழமை திருடிச் சென்றனர். 
சீர்காழி அருகேயுள்ள புத்தூர் பிரதான சாலையைச் சேர்ந்தவர் அப்துல்ஜபார் (62). இவர் செவ்வாய்க்கிழமை இரவு வீட்டை பூட்டி விட்டு புத்தூர் ஆசாத் தெருவிலுள்ள 2-ஆவது மகள் வீட்டுக்குச் சென்று தங்கிவிட்டு, புதன்கிழமை காலை வீட்டுக்கு வந்தாராம். அப்போது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை மர்ம நபர்கள் உடைத்து பீரோவில் வைத்திருந்த மோதிரம், தோடு, கைசெட், நெற்றிப்பட்டை, நெக்லஸ் உள்ளிட்ட 10 பவுன் தங்க நகை மற்றும் ரூ . 5 ஆயிரம் ரொக்கத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அப்துல்ஜபார், கொள்ளிடம் காவல் நிலையத்தில் புதன்கிழமை அளித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நேரத்தை மிச்சப்படுத்தும் ஏஐ : 94% பணியாளர்களின் கருத்து என்ன?

சென்னை-நாகர்கோவில் சிறப்பு ரயில் 19 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

ஆயிரம்விளக்கு அருகே பூங்காவில் சிறுமியை கடித்த வளர்ப்பு நாய்கள்

ரே பரேலியில் காங்கிரஸ் தொண்டர்களைச் சந்திக்கிறார் பிரியங்கா

ஏற்காட்டுக்கு சென்ற நடிகர்கள் பட்டாளம்: காரணம் என்ன?

SCROLL FOR NEXT