நாகை மாவட்டம், வேதாரண்யம், வேதாரண்யேசுவரர் திருக்கோயில் தேரோட்டத்தையொட்டி, வேதாரண்யம் வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு பிப். 26 -ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வேதாரண்யம், வேதாரண்யேசுவரர் திருக்கோயில் தேரோட்டம் திங்கள்கிழமை (பிப். 26) நடைபெறுகிறது. இதையொட்டி, வேதாரண்யம் வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் திங்கள்கிழமை உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறை, மார்ச் 3 -ஆம் தேதியை (சனிக்கிழமை) பணி நாளாகக் கொண்டு ஈடு செய்யப்படும் என ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.