நாகப்பட்டினம்

நாகை அரசு குழந்தைகள் காப்பகத்தில் சமத்துவப் பொங்கல்

DIN

நாகையில் உள்ள அன்னை சத்யா அரசு குழந்தைகள் காப்பகத்தில் பொங்கல் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் பொங்கல் விழாவைத் தொடங்கி வைத்துப் பேசுகையில்,  சுனாமியில் பெற்றோரை இழந்து காப்பகத்தில் உள்ள குழந்தைகள் ஏக்கம், கவலைக்கு இடமளிக்காமல், முன்னேற்றத்தை குறிக்கோளாகக் கொண்டு தன்னம்பிக்கையுடன் கல்விப் பயில வேண்டும். காப்பகக் குழந்தைகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் நிறைவேற்ற அரசு தயாராக உள்ளது என்றார்.
நாகை வருவாய்க் கோட்டாட்சியர் கண்ணன்,  மாவட்ட சமூகநல அலுவலர் ஜெயமீனா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு திட்ட அலுவலர் என். சிவகுமார், நாகை வட்டாட்சியர் ராகவன் மற்றும் காப்பகக் குழந்தைகள் கலந்துகொண்டனர்.
காப்பக வளாகத்தில் பொங்கலிடப்பட்டு, குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் கரும்பு துண்டுகள் வழங்கப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்மாற்றியில் தீ விபத்து: ஆட்சியா் அலுவலக மின்தூக்கியில் 8 போ் சிக்கித் தவிப்பு

சவீதா பொறியியல் கல்லூரியில் 29,460 புதிய கண்டுபிடிப்புகளுக்கான திட்ட வரைவுகளை காட்சிப்படுத்தி சாதனை

திருப்பத்தூா்: 92.3 சதவீதம் தோ்ச்சி

ஆதிபராசக்தி மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி

பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வேகத் தடைகள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

SCROLL FOR NEXT