நாகப்பட்டினம்

நாங்கூர் வைகுந்தநாதப் பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு

DIN

சீர்காழியை அடுத்த திருநாங்கூர் வைகுந்தநாதப் பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.
திருநாங்கூரில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான வைகுந்த விண்ணகரம் வைகுந்தநாதப் பெருமாள் கோயில் உள்ளது. இங்கு வைகுந்தவள்ளி தாயாருடன் பெருமாள் காட்சி தருகிறார். இக்கோயிலில் மூலவர் வைகுண்டத்தில் இருப்பது போன்று மூலவர் பரமபதநாதர் காட்சி தருகிறார். பெருமாள் காலடியில் கருடன் அமர்ந்திருப்பது போன்று அருள்பாலிக்கிறார். இங்கு மார்கழி மாத நிறைவு மற்றும் கருட சேவை விழாவையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
முன்னதாக பெருமாள், தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம், சாத்துமுறை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து, ஸ்ரீ தேவி, பூதேவி சமேத வைகுந்தநாதர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் புறப்பாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

மே.வங்கம்: 25,000 ஆசிரியர் பணி நியமனங்கள் ரத்து - இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பைத்தான் குழுவை பணிநீக்கம் செய்த கூகுள்! மென்பொருள் துறையில் அதிர்ச்சி!!

ஆண்டுதோறும் பாடப்புத்தகங்களை மதிப்பாய்வு செய்ய என்சிஇஆர்டிக்கு கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்!

நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது அறிவித்த திருமாவளவன்! | செய்திகள்: சிலவரிகளில் | 29.04.2024

SCROLL FOR NEXT