ஆணைக்காரன்சத்திரம் காவல் ஆய்வாளர் பொறுப்பேற்பு
நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த ஆணைக்காரன்சத்திரம் (கொள்ளிடம்) காவல் ஆய்வாளராக முனிசேகர் புதன்கிழமை பொறுப்பேற்றார்.
நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த ஆணைக்காரன்சத்திரம் (கொள்ளிடம்) காவல் ஆய்வாளராக முனிசேகர் புதன்கிழமை பொறுப்பேற்றார். இதற்கு முன்பு கொளத்தூர் காவல் ஆய்வாளராக பணியாற்றிய இவர், ராஜஸ்தானைச் சேர்ந்த நகைக் கடை கொள்ளையன் நாதுராமை பிடிப்பதற்கான தனிப்படையில் அங்கம் வகித்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.