நாகப்பட்டினம்

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி. வேல்முருகன் கைது: எம்.ஜி.கே. நிஜாமுதீன் கண்டனம்

DIN

தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி. வேல்முருகன் கைது செய்யப்பட்டதற்கு இந்திய தேசிய லீக் கட்சியின் தேசியப் பொதுச் செயலாளர் எம்.ஜி.கே. நிஜாமுதீன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை : பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மக்களைப் பார்த்து ஆறுதல் கூற அனைத்துக் கட்சித்  தலைவர்களும் அனுமதிக்கப்படும் நிலையில்,  தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர்  தி. வேல்முருகனுக்கு அனுமதி மறுத்து, விமான நிலையத்திலேயே அவரை  கைது செய்திருப்பது தமிழக அரசின் தவறான அடக்குமுறை.   அரசின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. 
தமிழக அரசு உடனடியாக வேல்முருகனை விடுவித்து, தூத்துக்குடியில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களைப் பார்த்து ஆறுதல் கூற அவருக்கு அனுமதி அளிக்க வேண்டும் என அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

அமேதியில் போட்டியிட ராகுலுக்கு விருப்பமில்லை? குழப்பத்தில் காங். தலைமை

எவரெஸ்ட் பயணத்தில் ஜோதிகா!

ஜூன் 1-ல் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்?

தமிழில் வெல்ல காத்திருக்கும் ஸ்ரீலீலா!

SCROLL FOR NEXT