நாகப்பட்டினம்

மீலாது நபி விழா

DIN

குத்தாலம் அருகே உள்ள தேரழந்தூரில் நடைபெறும் மீலாது நபி விழாவில் திங்கள்கிழமை (நவ.19) நடைபெற்ற நிகழ்ச்சியில் அரபிக் கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் உரையாற்றினர். 
குத்தாலம் வட்டம், தேரழந்தூர் பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் மீலாதுநபி விழா கடந்த 10-ஆம் தேதி தொடங்கி, நடைபெற்று வருகிறது. திங்கள்கிழமை நடைபெற்ற விழாவுக்கு, ரஹீமியா அரபிக் கல்லூரியின் கெளரவத் தலைவர் பஷீர் அஹமது தலைமை வகித்தார். ஜமாஅத் நிர்வாகிகள் கே.எம்.பி. முஹம்மது சலீம், எம்.ஏ. நஜீர் அஹமது, எம்.ஓ.ஹாஜாமைதீன், எம்.நிஸார் அஹமது,  ஹச்.எம்.ஜஹபர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ரஹீமியா அரபிக் கல்லூரியின் முதல்வர் ஷேக் முஹ்யீத்தீன், பேராசிரியர்கள் முஹம்மது முஜம்மில், அப்துல் லத்தீப், ஜபருல்லா  உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு பேசினர். இதில் திரளான ஜமாத்தார்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

SCROLL FOR NEXT