நாகப்பட்டினம்

திருக்கடையூர் குருஞானசம்பந்தர் மெட்ரிக். பள்ளி விழா: தருமபுர இளைய ஆதீனம் பங்கேற்பு

DIN

நாகை மாவட்டம், திருக்கடையூரில் உள்ள குருஞானசம்பந்தர் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மாணவர் மன்றத் தொடக்க விழாவில், தருமபுர இளைய ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் பங்கேற்றார்.
திருக்கடையூர் குருஞானசம்பந்தர் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் மாணவர் மன்றத் தொடக்கவிழா அண்மையில் நடைபெற்றது. இதில், தருமபுர இளைய ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் கலந்துகொண்டு, மாணவர் மன்றத்தைத் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். பின்னர் மாணவர்கள், பெற்றோர்களுக்கு அருளாசி வழங்கினார்.
முன்னதாக திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில் நிர்வாகத்தின் சார்பில், அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், ஆசிரியர்கள், கோயில் பணியாளர்கள், மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையால் மக்கள் அவதி

மரக்கடை உரிமையாளா் தற்கொலை

பெண் தற்கொலை: தம்பதியா் மீது வழக்கு

ரேஷன் கடையை மாற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம்

பிரகாசபுரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT