கோகுலாஷ்டமி சிறப்பு வழிபாடு
நாகை மாவட்டம், சீர்காழி கதிர்காம சுவாமிகள் அதிஸ்டானம் மற்றும் பாண்டுரெங்கர் பஜனை மடத்தில் கோகுலாஷ்டமி சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நாகை மாவட்டம், சீர்காழி கதிர்காம சுவாமிகள் அதிஸ்டானம் மற்றும் பாண்டுரெங்கர் பஜனை மடத்தில் கோகுலாஷ்டமி சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கோகுலாஷ்டமியையொட்டி, சீர்காழி தென்பாதியில் உள்ள கதிர்காம சுவாமிகள் அதிஸ்டானத்தில், தனி தன்னிதியில் அருள்பாலிக்கும் கிருஷ்ணர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, பல வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, அவல், பொட்டுக் கடலை, சர்க்கரை, சீடை, அதிரசம், வடை ஆகிய பொருள்களால் நிவேதனம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
இதேபோல், பிடாரி தெற்கு வீதியில் உள்ள பாண்டுரெங்கர் பஜனை மடத்தில் அலங்கரிக்கப்பட்ட கிருஷ்ணர் உருவப்படத்துக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் மஞ்சள் தண்ணீர் ஊற்றி உறிஅடி நிகழ்ச்சியும், இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை எம்.சி.எஸ். சேகர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.