சீர்காழி பகுதியில் சனிக்கிழமை (செப்.15) மின் விநியோகம் இருக்காது என வைத்தீஸ்வரன்கோயில் மின்சார வாரிய உதவிசெயற் பொறியாளர் கோ. பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வைத்தீஸ்வரன் கோயில் துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை (செப்.15) மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால், இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் சீர்காழி, வைத்தீஸ்வரன்கோயில், சட்டநாதபுரம், புங்கனூர், மேலச்சாலை, கதிராமங்கலம், ஆத்துக்குடி, திருப்புங்கூர் ஆகிய பகுதிகளில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.