தமிழ்நாடு தொழிற் பயிற்சி அலுவலர் சங்க பிரசார இயக்கக் கூட்டம், நாகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சங்கத்தின் கிளைத் தலைவர் சிவகுருநாதன் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் மு. சீனிவாசன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, தொழிற் பயிற்சி அலுவலர் சங்கம் சார்பில் ஜூலை மாதம் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் விளைவுகள், ஜாக்டோ - ஜியோ முன்னெடுக்கும் போராட்டத் திட்டங்கள் குறித்து விளக்கிப் பேசினார். மண்டலச் செயலாளர் எஸ். நவநீதன், அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ப. அந்துவன் சேரல், மாவட்டச் செயலாளர் ஏ.டி. அன்பழகன் ஆகியோர் பேசினர். கிளை நிர்வாகி ஜெ.சி.பால் மில்லினியர் நன்றி கூறினார்.