நாகப்பட்டினம்

அதிமுக பிரமுகரிடம் ரூ.18 ஆயிரம் பறிமுதல்

DIN


கீழ்வேளூர் அருகே ஆவணங்களின்றி அதிமுக பிரமுகர் வைத்திருந்த ரூ.18 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படையினர் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர்.
கீழ்வேளூரை அடுத்த ஆவராணி புதுச்சேரி கிராமத்தில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கப்படுவதாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்து. இதையடுத்து, நாகை துணை வட்டாட்சியர் கிரிஜா தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர், அங்கு சென்று சோதனை செய்தனர்.
 அப்போது, கீழத்தெருவைச் சேர்ந்த அதிமுக ஊராட்சி செயலாளர் மு. மணி (52) என்பவர் ஆவணங்களின்றி ரூ.18 ஆயிரம் வைத்திருந்தது கண்டறியப்பட்டது. அதைப் பறிமுதல் செய்த பறக்கும் படையினர், பணத்தை கீழ்வேளூர் வட்டாட்சியர் கபிலன் வசம் ஒப்படைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி நள்ளிரவில் டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை!

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

SCROLL FOR NEXT