நாகப்பட்டினம்

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிறந்த நாள் விழா

DIN

மயிலாடுதுறைத் தமிழ்ச் சங்க அலுவலகத்தில், சனிக்கிழமை கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. 
மயிலாடுதுறை உலகத் தமிழ்க் கழகத் தலைவர் கோ. அரங்கநாதன் தலைமையில் நடைபெற்ற விழாவில், மயிலாடுதுறைத் தமிழ்ச் சங்க நிறுவனர் ஜெனிபர் எஸ். பவுல்ராஜ், தலைவர் க. ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், கேசிங்கன் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தமிழாசிரியர் ஜெ. வீரபாண்டியன், யாழிசை மாமணி கே.எஸ். மதிவாணன், சன்மார்க்க சீலர் சா.தி. ராமலிங்கம், தேரிழந்தூர் கம்பர் கழக இணைச் செயலர் மு. ஜானகிராமன், பணி நிறைவு பெற்ற வட்டாட்சியர் வெ. ராமகிருஷ்ணன் ஆகியோர் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் குறித்து புகழுரை ஆற்றினர். முன்னதாக, அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறைச்சந்தையில் தவற விட்ட பணப்பை ஆந்திர மாநில தம்பதியரிடம் ஒப்படைப்பு -கைதிக்கு பாராட்டு

மேம்பாலத்தை சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க பாஜக வலியுறுத்தல்

ரத்த தான முகாம்

மேலக்கடலாடி ஸ்ரீபாதாள காளியம்மன் களரி திருவிழா

வெளிநாடுகளில் வேலை தருவதாகக் கூறும் மோசடி நிறுவனங்களை நம்ப வேண்டாம்

SCROLL FOR NEXT