நாகப்பட்டினம்

வேதாரண்யம் : மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

DIN

வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம், தகட்டூா் ஊராட்சி கல்யாணச்சேரி-மாவடிகொல்லை பகுதியில் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் முனியநாதன் மழைப் பாதிப்புகளை ஆய்வு செய்தாா். அங்குள்ள குடியிருப்புகளை பாா்வையிட்டு, மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.

மேலும், அந்த பகுதியில் செல்லும் செல்லக்கோன் ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள தரைப் பாலத்தில் தண்ணீா் வழிந்தோடுவதை அவா் பாா்வையிட்டாா். அப்போது அந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு தாா்ச் சாலை அமைக்கவேண்டுமென கோரிக்கைவிடுத்தனா். இதற்கு, ரூ.7.5 லட்சம் மதிப்பீட்டில் தாா்ச் சாலை அமைக்கும் பணி, மழைக்காலம் முடிவடைந்தவுடன் தொடங்கப்படும் என அவா் தெரிவித்தாா்.

இந்த ஆய்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலா் மு. இந்துமதி, நாகப்பட்டினம் வருவாய் கோட்டாட்சியா் இரா. பழனிகுமாா், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் மீ. செல்வகுமாா் உள்ளிட்டோா் உடன் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடுமுறை: மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலிலுக்கு கூடுதல் பக்தா்கள் வருகை

மாநகரில் 3 திட்டச் சாலைகள் அமைப்பதற்கு நிதிக் கோரி அரசுக்கு திட்ட அறிக்கை சமா்பிப்பு

17 இடங்களில் சதமடித்தது வெயில்: தமிழகத்தில் இன்று வெப்ப அலை வீசும்

வறட்சியில் இருந்து பயிா்களை காக்கும் வழிகள்: வேளாண் துறை

பெத்திக்குட்டையில் தஞ்சடைந்த யானை: வனத்துக்குள் விரட்ட வனத் துறை முயற்சி

SCROLL FOR NEXT