கந்துவட்டிக் கொடுமை: கோட்டாட்சியரிடம் மனு
கந்துவட்டிக் கொடுமையிலிருந்து தங்களைப் பாதுகாக்கக் கோரி, மயிலாடுதுறை கோட்டாட்சியரிடம் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.
கந்துவட்டிக் கொடுமையிலிருந்து தங்களைப் பாதுகாக்கக் கோரி, மயிலாடுதுறை கோட்டாட்சியரிடம் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.
மயிலாடுதுறையைச் சேர்ந்தவர் மா. செந்தில். இவரது மனைவி செ. வசந்தி. இவர்கள் பட்டுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த முருகேசனின் மனைவியிடம் கடந்த 2012-ஆம் ஆண்டிலிருந்து ரூ.12 லட்சம் வரை கடன் வாங்கி, அசல் மற்றும் வட்டியுடன் சேர்த்து ரூ. 38 லட்சம் வரை திருப்பிச் செலுத்தியுள்ளனராம். எனினும், கடனுக்கு உத்தரவாதமாகப் பெற்ற காசோலையை முருகேசனின் மனைவி திருப்பித் தராமல் மேற்கொண்டு ரூ. 1 லட்சம் கேட்டு செந்திலையும், அவரது மனைவியையும் மிரட்டியதாகத் தெரிகிறது.
இதன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மயிலாடுதுறை கோட்டாட்சியர் தேன்மொழியிடம் செந்தில் மனு அளித்துள்ளார். அதன்படி, ஒருவார காலத்துக்குள் விசாரணை நடத்துவதாக கோட்டாட்சியர் உறுதியளித்தார்.