நாகப்பட்டினம்

தனியார் வேலை வாய்ப்பு முகாம்

மயிலாடுதுறை தியாகி ஜி. நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

DIN

மயிலாடுதுறை தியாகி ஜி. நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
மயிலாடுதுறை டெல்டா ஜேசிஐ மற்றும் ஈக்விடாஸ் நிதி நிறுவனம் இணைந்து நடத்திய இந்த முகாமுக்கு, ஜேசிஐ மயிலாடுதுறை டெல்டா சங்கத் தலைவர் செந்தில் ஆனந்த் தலைமை வகித்தார். ஜேசிஐ மண்டலம் 23-இன் தலைவர் கைலாஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். 
ஈக்விடாஸ் நிதி நிறுவன மனிதவள மேம்பாட்டு பிரிவைச் சேர்ந்த குணசேகர், பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு, நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார். முகாமில் தனியார் துறைகளைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றன. பன்னாட்டு நிறுவனங்களின் மேலாளர்கள் பலர் கலந்து கொண்டு, நூற்றுக்கணக்கான இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினர். ஜேசிஐ செயலாளர் திருமலைபாண்டியன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபில் ஸ்கோர்! உலா வரும் கட்டுக்கதைகளும் உண்மைகளும்!

ஸ்னிகோ தொழில்நுட்பத்தில் பிழைகள்..! ஆஷஸ் போட்டியில் தொடரும் சர்சை!

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

SCROLL FOR NEXT