நாகப்பட்டினம்

ஓய்வூதியர்கள் கவனத்துக்கு...

DIN

கடந்த 3 மாதங்களில் கருவூல அலுவலக நேர்காணலில் பங்கேற்காத ஓய்வூதியதாரர்கள் ஜூலை 31-ஆம் தேதிக்குள் கருவூல அலுவலகங்களில் நேரில் ஆஜராகி பதிவு பெற வேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு :  நாகை மாவட்ட கருவூல அலுவலகம் மற்றும் அனைத்து சார்நிலை கருவூல அலுவலகங்களில் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களில், நிகழாண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில் நேர்காணலில் பங்கேற்காதவர்கள், ஜூலை 31-ஆம் தேதிக்குள் தொடர்புடைய கருவூல அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும்.  நேரில் ஆஜராகாத ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் ஆகஸ்ட் மாதம் முதல் நிறுத்தப்படும் என ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT