நாகப்பட்டினம்

சிவனடியார்கள் அவமதிப்பு:  ரயில் டிக்கெட் பரிசோதகர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

சிவனடியார்களை அவமதித்த ரயில்வே டிக்கெட் பரிசோதகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.

DIN


சீர்காழி,   ஜூன் 13: சிவனடியார்களை அவமதித்த ரயில்வே டிக்கெட் பரிசோதகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து,  தென்னக ரயில்வே பொதுமேலாளருக்கு, இந்து மக்கள் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜெ.சுவாமிநாதன் அனுப்பிய புகார் மனு: கடலூர் மாவட்டம் ,வேப்பூரிலிருந்து திருநாவுக்கரசர் திருமடத்தைச் சேர்ந்து 151 சிவனடியார்கள் ராமேசுவரம், காசி, கயா, புத்தகயா , அலகாபாத் , திரிவேணி சங்கமம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிவாலயங்களுக்கு புனித யாத்திரை சென்றுவிட்டு, ஜூன் 7- ஆம் தேதி ரயிலில் விருத்தாசலத்துக்கு
வந்தனர்.
அவர்கள், ரயில் நிலையத்திலிருந்து வெளியே வரும்போது,  பயணச்சீட்டு பரிசோதகர்  சந்தன்குமார் சிங் என்பவர் சிவனடியார்களிடம் பயணச்சீட்டுகளை கேட்டுள்ளார். அப்போது, பின்னாள் வரும் குருசாமியிடம் பயணச்சீட்டு உள்ளதாக முன்னாள் சென்றவர்கள் தெரிவித்துள்ளனர். இதை ஏற்றுக்கொள்ளதாக பயணச்சீட்டு பரிசோதகர், சிவனடியார்களிடம் தரக்குறைவாக நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகார் மனுவில் 
தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

90km/h வேகத்தில் வீசிய காற்று! சாய்ந்த Statue of liberty மாதிரி சிலை!

பெண் மருத்துவரின் ஹிஜாப்பை வலுக்கட்டாயமாக விலக்கிய நிதீஷ் குமார்!

மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்த குயிண்டன் டி காக்!

ஆல்ரவுண்டர் வெங்கடேஷ் ஐயரை வாங்கிய ஆர்சிபி..! அணிக்கு கூடுதல் பலம்!

டிச.29-ல் பல்லடத்தில் திமுக மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு

SCROLL FOR NEXT