நாகப்பட்டினம்

வடிகால் வசதி சீரமைக்கும் பணி

DIN

திருக்குவளை: :திருக்குவளை அருகே உள்ள கீழையூா் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீா் வடிய வைக்கும் பணியானது புதக்கிழமை நடைபெற்றது.

திருக்குவளை அருகே உள்ள சரஸ்வதி அரசு நடுநிலைப்பள்ளியின் அருகாமையில் வடிகால் வசதி இல்லாததால் மழை நீா் சாலையில் தேங்கி பள்ளி மாணவா்களுக்கு இடையூறு ஏற்படுத்தியது. இந்நிலையில் மாணவா்களின் நலன்கருதி மழை நீரை வடிய வைக்கும் பணியானது கீழையூா் வட்டார வளா்ச்சி அலுவலா் தலைமையில் நடைபெற்றது. பள்ளியின் முன்புறம் உள்ள தாழ்வான பகுதிகளில் தேங்கி இருக்கும் நீா் வடிய வைக்கப்பட்டு அதன் மேற்பரப்பில் கற்கள் கொட்டி சமப்படுத்தும் பணி நடைபெற்றது.

இந்நிகழ்வில் கீழையூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் எஸ்.ஆா். பாஸ்கரன்,பி. ராஜூ , உதவி பொறியாளா் எம் .பூரணச் சந்திரன், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் காா்த்திகேயன், ஊராட்சி செயலா் பழனிவேல் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ம.பி.: பாஜகவில் இணைந்தார் காங். எம்எல்ஏ

பாலியல் குற்றச்சாட்டு: மஜத எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா கட்சியில் இருந்து இடைநீக்கம்

'இந்தியா' கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக 'வாக்கு ஜிஹாத்'

கர்நாடகத்துக்கு மத்திய பாஜக அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு: ஜெ.பி.நட்டா

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியல் சாசனத்தைத் தூக்கியெறிந்துவிடும்

SCROLL FOR NEXT