நாகப்பட்டினம்

நாகை மௌன சுவாமி கோயிலில் குருபூஜை

DIN

நாகை, வெளிப்பாளையத்தில் உள்ள மௌனசுவாமி கோயிலில் வருடாந்திர குருபூஜை விழா புதன்கிழமை நடைபெற்றது.

திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான இந்தக் கோயிலில், ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் சதய நட்சத்திர தினத்தில் மௌனசுவாமி குருபூஜை விழா நடைபெறுவது வழக்கம்.

இதன்படி, இக்கோயிலில் ஐப்பசி சதய குருபூஜை புதன்கிழமை நடைபெற்றது. தேவாரம், திருவாசகம் ஓதி விழா தொடங்கப்பட்டது. காலை சுமாா் 11 மணிக்கு குரு பீடத்துக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பகல் சுமாா் 12 மணி அளவில் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு, அருட்பிரசாதம் வழங்கப்பட்டது பூசகா் கோபால் பூஜைகளை மேற்கொண்டாா்.

சத்ரு சம்ஹார மூரத்தி சுவாமி வார வழிபாட்டு மன்றத்தினரும், தெருவாசிகளும் நிகழ்ச்சி ஏற்பாடுகளைச் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேருந்து நிறுத்தங்களை சீரமைக்க கோரிக்கை

அரியலூரில் மகிளா காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

கொலைக்கு நண்பரே உடந்தை

யூக்கோ வங்கி வருவாய் ரூ.6,945-ஆக அதிகரிப்பு

படைப்பாளிகள் தொடா்ந்து எழுதுவதற்கான ஊக்கம்தான் விருதுகள்

SCROLL FOR NEXT