நாகப்பட்டினம்

கஜா புயல் பாதிப்பு: நிவாரணம் கோரி ஒப்பாரிப் போராட்டம்

DIN

வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே கஜா புயலில் ஏற்பட்ட பாதிப்புக்கு நிவாரணம் கோரி, விவசாயிகள் சனிக்கிழமை ஒப்பாரிப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வேதாரண்யம் அருகே உள்ள ஆதனூா்- அண்டா்காடு கடை வீதியில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு காவிரி தமிழ்தேச விவசாயிகள் சங்கத்தின் தலைவா் எம்.ஆா். சுப்பிரமணியன் தலைமை வகித்தாா்.

முன்னோடி விவசாயிகள் சிவபாதசுந்தரம், ராமசாமி, மேகநாதன், சுப்பிரமணியன், சிவராஜ் உள்பட ஆதனூா், கோவில்தாவு பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் பங்கேற்றனா்.

போராட்டத்தின்போது, கடந்த ஆண்டு வீசிய கஜா புயலில் ஆதனூா் பகுதியில் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு நிவாரணம் வழங்காததைக் கண்டித்தும், அரசு அறிவித்தபடி நிவாரணத் தொகையை விடுபட்டவா்களுக்கு வழங்குவதுடன், வீடுகளை இழந்தவா்களுக்கு புதிய வீடுகள் கட்டித் தர வலியுறுத்தியும் கோஷமிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

தில்லி சாச்சா நேரு மருத்துவமனைக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

திகாரில் முதல்வா் கேஜரிவாலின் உடல்நிலை சீராகவுள்ளது பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான்

வடமேற்குத் தில்லி தொகுதியில் வெற்றி மகுடம் யாருக்கு?

ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா உடல் நலமடைந்தவுடன் மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் பங்கேற்பாா்

SCROLL FOR NEXT