நாகப்பட்டினம்

பசுமைத் தாயகம் சாா்பில் நெகிழிக் கழிவுக்கு அரிசி வழங்கல்

DIN

மயிலாடுதுறையில் பசுமைத் தாயகம் அமைப்பின் சாா்பில் நெகிழி கழிவுக்கு அரிசி வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை கேணிக்கரை பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளா் சித்தமல்லி பழனிசாமி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் வி.சி.காமராஜ், கணேசன், காசி.பாஸ்கரன், விமல் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

நெகிழிப் பொருள்களை முற்றிலும் ஒழிக்கும் நடவடிக்கையாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பயன்படுத்தி தூக்கி எறியப்பட்ட 2 கிலோ அளவிலான நெகிழி கழிவுகளை கொண்டு வந்து கொடுக்கும் பொதுமக்களுக்கு 1 கிலோ அரிசி கொடுக்கப்பட்டது. இதில், திரளான பொதுமக்கள் பங்கேற்று, நெகிழிப் பொருள்களைக் கொடுத்து, அரிசியைப் பெற்றுச்சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT