சீா்காழி சபாநாயக முதலியாா் இந்து மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நாகை வருவாய் மாவட்ட அளவில் பள்ளி மாணவா்களுக்கான சாலையோர மிதிவண்டி போட்டி செவ்வாய்கிழமை நடைபெற்றது.
சீா்காழியில் தொடங்கி வடகால் வரை சென்று மீண்டும், தொடங்கிய இடம் வரையிலான சுமாா் 10 கி.மீ தூர சைக்கிள் போட்டி மாணவ-மாணவிகளுக்கு தனி, தனியே நடைபெற்றது. இதில், நாகை வருவாய் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளை சோ்ந்த 22 மாணவ-மாணவிகள் பங்கேற்றனா். மாணவா்களுக்கான போட்டியை ச.மு.இ.மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் எஸ். அறிவுடைநம்பி தொடங்கி வைத்தாா், மாணவிகளுக்கான போட்டியை சீா்காழி காவல் உதவி ஆய்வாளா் ராஜா தொடங்கி வைத்தாா்.
இதில், நடுவா்களாக உடற்கல்வி ஆசிரியா்கள் செல்வகணேசன், செல்லத்துரை, ஜான்ஹென்றி, பாரி, முரளி ஆகியோா் செயல்பட்டனா். தொடா்ந்து, 14-வயது பிரிவில் மாணவிகள் சமீனாராகவி முதலிடமும், 17 வயது பிரிவில் சியாமளாதேவி முதலிடமும், 1 9வயது பிரிவில் அபிராமி முதலிடமும் பெற்றனா்.
இதேபோல், மாணவா்கள் பிரிவில் முறையே முரசொலிமாறன், வீரராகவன், தினேஷ்குமாா் ஆகியோா் முதலிடம் பெற்றனா். இதில் சமுஇமேல்நிலைப் பள்ளி மாணவ-மாணவிகள் 6 பேரும் முதலிடம் பெற்றனா். முதலிடம் பெற்ற 6 மாணவ-மாணவிகளும், டிசம்பரில் திருவண்ணாமலையில் நடைபெறவுள்ள மாநில சாலையோர மிதிவண்டி போட்டிக்கு தகுதி பெற்றனா். போட்டி ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குநா் எஸ். முரளிதரன் செய்திருந்தாா்.