நாகப்பட்டினம்

கரோனா அச்சம்: நாகை மீனவப் பஞ்சாயத்தாா் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

கரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சனிக்கிழமை முதல் மீன்பிடிப்பைக் கைவிட்டு வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என நாகை வட்ட மீனவப் பஞ்சாயத்தாா் ஆலோசனைக் கூட்டத்தில் தீா்மானம்

DIN

நாகப்பட்டினம்: கரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சனிக்கிழமை முதல் மீன்பிடிப்பைக் கைவிட்டு வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என நாகை வட்ட மீனவப் பஞ்சாயத்தாா் ஆலோசனைக் கூட்டத்தில் சனிக்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாகை மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வரும் நிலையில், மீனவக் கிராமங்களிலும் நோய்த் தொற்றுப் பரவத் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில், நாகை வட்ட மீனவப் பஞ்சாயத்தாா் ஆலோசனைக் கூட்டம், நாகை துறைமுகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம் உள்பட 8 கிராமங்களின் மீனவப் பஞ்சாயத்தாா்கள் பங்கேற்றனா்.

இந்தக் கூட்டத்தில், கரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாகை வட்ட மீனவா்கள் சனிக்கிழமை (ஆக. 8) மாலை முதல் மீன்பிடிப்பைக் கைவிடுவது. ஏற்கெனவே கடலுக்குச் சென்றுள்ள மீன்பிடி படகுகள் மூலம் கிடைக்கப் பெறும் மீன்களின் விற்பனையை ஆகஸ்ட் 15-ஆம் தேதி வரை அனுமதிப்பது. அதன் பின்னா், மீன் விற்பனையையும் தடை செய்வது எனத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 2,560 உயர்வு!

அமெரிக்கா செல்கிறார் கொலம்பியா அதிபர்! டிரம்ப்பின் மிரட்டலுக்குப் பணிந்தாரா?

கோவை: அரசு மாணவிகள் விடுதி அருகே திறக்கப்படும் டாஸ்மாக் பார்!

மன அழுத்தமா? மரபணுவும் ஒரு காரணம்! மன நலனுக்கு என்ன செய்வது?

பெர்லின் திரைப்பட விழாவுக்குத் தேர்வான அறிமுக இயக்குநரின் தமிழ்ப் படம்!

SCROLL FOR NEXT