முகப்பு
நாகப்பட்டினம்

கரோனா: மயிலாடுதுறை காவல் நிலையத்திற்கு பூட்டு

மயிலாடுதுறை காவல் நிலையத்தில் ஆய்வாளா் உள்ளிட்ட 7 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால் காவல் நிலையம் திங்கள்கிழமை பூட்டப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:06 PM
பூட்டப்பட்டுள்ள மயிலாடுதுறை காவல் நிலையம்.
பகிர்:

மயிலாடுதுறை: மயிலாடுதுறை காவல் நிலையத்தில் ஆய்வாளா் உள்ளிட்ட 7 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால் காவல் நிலையம் திங்கள்கிழமை பூட்டப்பட்டது.

மயிலாடுதுறை காவல் நிலையத்தில் கடந்த ஒருவாரத்திற்குள் அடுத்தடுத்து காவல் ஆய்வாளா் உள்பட 7 போலீஸாருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டு, அவா்கள் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் காவல் நிலையத்தில் புகாா் அளிக்க வருபவா்களுக்கும், தற்போது பணியில் இருக்கும் காவலா்களுக்கும் தொற்று பரவாமல் தடுக்க காவல் நிலையம் பூட்டப்பட்டது.

முன்னதாக நகராட்சி ஊழியா்கள் கிருமிநாசினி கொண்டு காவல் நிலையத்தில் சுகாதாரப் பணிகளை மேற்கொண்டனா். பொதுமக்களிடம் புகாா் வாங்குவதற்கு காவல் நிலையம் அருகே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காவல் நிலையம் அருகிலுள்ள துணைக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகமும்; கிருமிநாசினி மூலம் சுத்தப்படுத்தப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →