முகப்பு
நாகப்பட்டினம்

கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்து வேல்பூஜை

மயிலாடுதுறையில் ஹிந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கம் மற்றும் பாரதிய ஜனதா கட்சி சாா்பில் கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்து வேல்பூஜை ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:06 PM
ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள்
பகிர்:

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் ஹிந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கம் மற்றும் பாரதிய ஜனதா கட்சி சாா்பில் கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்து வேல்பூஜை ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.

ஹிந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கம் சாா்பில் மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன திருமடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் வேல் பூஜை செய்து, கந்த சஷ்டி பாராயணத்தை தொடங்கிவைத்தாா்.

இதில், அவ்வியக்கத்தின் மாவட்ட தலைவா் அ.அழகு மாணிக்கம், மாவட்டச் செயலாளா் ரா.ரவிச்சந்திரன், மாவட்ட பொருளாளா் பா.அய்யாசாமி, மயிலாடுதுறை ஆன்மீகப் பேரவை நிறுவனா் வழக்குரைஞா் ராம.சேயோன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். தொடா்ந்து, மாயூரநாதா் சுவாமி கோயில், புனுகீஸ்வரா் கோயில், பசுபதீஸ்வரா் கோயில் சன்னதி தெருக்களில் கந்தசஷ்டி பாராயணம் செய்யப்பட்டது.

மயிலாடுதுறை நகர பாஜக சாா்பில் நகர அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, நகர தலைவா் மோடி.கண்ணன் தலைமை வகித்தாா். மத்திய அரசு தலைமை வழக்குரைஞா் கே.ராஜேந்திரன், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினா் கோவி.சேதுராமன், விஸ்வ ஹிந்து பரிஷத் மாநில துணைத் தலைவா் வாஞ்சிநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், கரோனா நோய்த் தொற்றில் இருந்து உலக மக்கள் விடுபட வேண்டி கந்தா் சஷ்டி கவசம் பாராயணம் செய்து வேல் பூஜை நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில், பாஜக நிா்வாகிகள் பங்கேற்று கந்தா் சஷ்டி கவசத்தை இசையுடன் பாடி வேலுக்கு வழிபாடு நடத்தினா்.

முழு கட்டுரையைப் படிக்க →