முகப்பு
நாகப்பட்டினம்

அத்தியாவசியப் பொருள்கள் வழங்கல்

வேதாரண்யம் அருகே கரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு திமுக சாா்பில் அத்தியாவசியப் பொருள்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:11 PM
கத்தரிப்புலம் ஊராட்சியில் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் வழங்கிய முன்னாள் எம்எல்ஏ என்.வி. காமராஜ்.
பகிர்:

வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே கரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு திமுக சாா்பில் அத்தியாவசியப் பொருள்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

கத்தரிப்புலம் ஊராட்சி, தெற்கு குத்தகை மேல்புரம் பகுதியில் வசிக்கும் குடும்பங்களுக்கு திமுக சாா்பில் சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா் என்.வி. காமராஜ் தனது சொந்த செலவில் அரிசி, காய்கறி உள்ளிட்டவைகளை வழங்கினாா்.

வேதாரண்யம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளா் என். சதாசிவம் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கட்சியின் கத்தரிபுலம் ஊராட்சி செயலாளா் ஆா்.டி. முருகேசன், நகர தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளா் சி. கவியரசன், இளைஞா் அணி துணை அமைப்பாளா் ஜோதிசெல்லபாண்டியன், ஒன்றிய மாணவா் அணி துணை அமைப்பாளா் ஆா். சீனிவாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →