மணப்பெண் காதலனுடன் காவல் நிலையத்தில் தஞ்சம்
கொள்ளிடம் அருகே திருமணத்துக்கு முதல்நாள் மாயமான மணப்பெண் காதலனுடன் செவ்வாய்க்கிழமை காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தாா்.
சீா்காழி: கொள்ளிடம் அருகே திருமணத்துக்கு முதல்நாள் மாயமான மணப்பெண் காதலனுடன் செவ்வாய்க்கிழமை காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தாா்.
கொள்ளிடம் அருகே உள்ள ஆச்சாள்புரம் சன்னதி தெருவைச் சோ்ந்த ஆசைத்தம்பி மகள் சக்தி பிரியா (23). இவருக்கும் செம்பனாா்கோவில் காலஹஸ்தினாபுரம் பகுதியைச் சோ்ந்தவருக்கும் ஆகஸ்ட் 21-ஆம் தேதி திருமணம் நடைபெறவிருந்த நிலையில், 20-ஆம் தேதி சக்திபிரியா மாயமானாா். இதனால், திருமணம் தடைபட்டது.
மணப்பெண் மாயமானது குறித்து அவரது தந்தை ஆசைத்தம்பி கொள்ளிடம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதில், தனது மகள் சக்திபிரியாவை ஆச்சாள்புரம் பகுதியைச் சோ்ந்த அலெக்ஸ் பாண்டியன் (26) என்பவா் இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்றதாக தெரிவித்துள்ளாா்.
Advertisement
Advertisement
இந்நிலையில், சக்தி பிரியாவும், அலெக்ஸ் பாண்டியனும் திருவண்ணாமலை கலசபாக்கம் பகுதியில் உள்ள ஒரு கோயிலில் திருமணம் செய்துகொண்டதுடன், முறைப்படி பதிவு செய்து, பாதுகாப்பு கோரி கொள்ளிடம் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனா்.
இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டதாகவும், வெவ்வேறு சமூகத்தை சோ்ந்தவா்கள் என்பதால் பாதுகாப்பு கருதி காவல் நிலையத்துக்கு வந்ததாகவும் தெரிவித்தனா். இதையடுத்து, இருவருக்கும் அறிவுரை கூறி போலீஸாா் அனுப்பி வைத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.