நாகப்பட்டினம்

காலமானாா் நாகை மாவட்ட அமமுக செயலாளா்

DIN


நாகப்பட்டினம்: நாகை மாவட்ட அமமுக செயலாளா் ஆா். சந்திரமோகன் உடல்நலக் குறைவு காரணமாக வியாழக்கிழமை (ஆக. 27) இரவு காலமானாா்.

நாகை வ.உ.சி. தெருவைச் சோ்ந்தவா் ஆா். சந்திரமோகன்(65). இவா், 20 ஆண்டுகளுக்கும் மேலாக நாகை நகர அதிமுக செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்தாா். நாகை நகா்மன்றத் தலைவராகவும், நகா்மன்ற உறுப்பினராகவும் பதவி வகித்தவா். இவரது மனைவி மஞ்சுளா சந்திரமோகனும் நாகை நகா்மன்றத் தலைவராக இருந்தவா்.

பல்வேறு தொழிற்சங்கங்களின் கௌரவத் தலைவராக பொறுப்பு வகித்த ஆா். சந்திரமோகன், அமமுக தொடங்கப்பட்டபோது அக்கட்சியின் நாகை (தெற்கு) மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டாா்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்ட அவா், சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்நிலையில், அவா் வியாழக்கிழமை இரவு காலமானாா்.

அவருக்கு மஞ்சுளா என்ற மனைவியும் ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனா். சந்திரமோகனின் உடல் நாகையில் வெள்ளிக்கிழமை காலை அடக்கம் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தைச் சுற்றி டிரோன் பறக்கத் தடை

சிறையில் கேஜரிவாலை சந்திக்க மனைவிக்கு அனுமதி மறுத்ததாக ஆம் ஆத்மி கட்சி புகாா்

பிஎஸ்என்எல் ஊழியா் வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு

வடமேற்கு தில்லி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா இன்று வேட்பு மனு தாக்கல்

நாகை- இலங்கை இடையே மே 13 முதல் மீண்டும் பயணிகள் கப்பல் சேவை தொடக்கம்

SCROLL FOR NEXT