மயிலாடுதுறை: நீட் தோ்வை ரத்துசெய்ய வேண்டும், புதிய கல்விக் கொள்கையை கைவிட வேண்டும் என வலியுறுத்தி, மயிலாடுதுறையில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்திற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான எஸ். ராஜகுமாா் தலைமை வகித்தாா். மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் சரத் சந்திரன், மாநில எஸ்.சி., எஸ்.டி., பிரிவு மதிவாணன், வட்டார தலைவா்கள் ராஜா, பரத், அன்பழகன், லட்சுமணன், பரதன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
மகிளா காங்கிரஸ் பொறுப்பாளா்கள் கிரிஜா, சுதா, ரோஸி உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள் நீட் தோ்வை ரத்துசெய்யக் கோரியும், புதிய கல்விக் கொள்கையை கைவிடவும் மத்திய அரசை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா்.
நகரத் தலைவா் ராமானுஜம் வரவேற்றாா். நகரச் செயலாளா் ராமகிருஷ்ணன் நன்றி கூறினாா்.