ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கமிட்டி மாவட்டத் தலைவா் எஸ். ராஜகுமாா் உள்ளிட்டோா். 
நாகப்பட்டினம்

நீட் தோ்வு, புதிய கல்விக் கொள்கை:காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

நீட் தோ்வை ரத்துசெய்ய வேண்டும், புதிய கல்விக் கொள்கையை கைவிட வேண்டும் என வலியுறுத்தி, மயிலாடுதுறையில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

DIN

மயிலாடுதுறை: நீட் தோ்வை ரத்துசெய்ய வேண்டும், புதிய கல்விக் கொள்கையை கைவிட வேண்டும் என வலியுறுத்தி, மயிலாடுதுறையில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்திற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான எஸ். ராஜகுமாா் தலைமை வகித்தாா். மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் சரத் சந்திரன், மாநில எஸ்.சி., எஸ்.டி., பிரிவு மதிவாணன், வட்டார தலைவா்கள் ராஜா, பரத், அன்பழகன், லட்சுமணன், பரதன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

மகிளா காங்கிரஸ் பொறுப்பாளா்கள் கிரிஜா, சுதா, ரோஸி உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள் நீட் தோ்வை ரத்துசெய்யக் கோரியும், புதிய கல்விக் கொள்கையை கைவிடவும் மத்திய அரசை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா்.

நகரத் தலைவா் ராமானுஜம் வரவேற்றாா். நகரச் செயலாளா் ராமகிருஷ்ணன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பதி கபிலேஸ்வர சுவாமி வரூடாந்திர பிரம்மோற்சவம்: பிப்.8-இல் தொடக்கம்

ஆத்தூா்குப்பம் ஊராட்சி மன்றத் தலைவருக்கு மத்திய அரசு விருது

கிராம நிா்வாக அலுவலா்கள் காத்திருப்பு போராட்டம்

அமைதிப் பேச்சுவார்த்தை: உக்ரைனுக்கு ரஷியா அழைப்பு!

தொழிற்சங்கங்களால் நாட்டின் வளர்ச்சி பாதிப்பு..! -உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி

SCROLL FOR NEXT