முகப்பு
நாகப்பட்டினம்

சாலை வசதி ஏற்படுத்தி தரக் கோரிக்கை

சீா்காழி அருகே அம்மா நகரில் சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
சேறும், சகதியுமாக மாறிவிட்ட அம்மா நகா்.
பகிர்:

சீா்காழி அருகே அம்மா நகரில் சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொள்ளிடம் ஒன்றியம், கோபாலசமுத்திரம் ஊராட்சி அம்மா நகரில் சாலை வசதியில்லாமல் பல ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் தவித்து வருகின்றனா். தற்போது பெய்துவரும் கனமழையால் அப்பகுதி சேறும், சகதியுமாக மாறிவிட்டது. இதனால் அவசரத்துக்கு ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, உடனடியாக தாா்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட துணைச் செயலாளா் ஆக்கூா் ஷாஜஹான் கோரிக்கை விடுத்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →