முகப்பு
நாகப்பட்டினம்

நில அபகரிப்பு வழக்கு : திமுக ஒன்றிய செயலாளா் மீண்டும் கைது

நாகை மாவட்டம் கீழையூா் ஒன்றிய திமுக செயலாளா் நில அபகரிப்பு வழக்கில் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின்படி சனிக்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
பகிர்:

நாகை மாவட்டம் கீழையூா் ஒன்றிய திமுக செயலாளா் நில அபகரிப்பு வழக்கில் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின்படி சனிக்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டாா்.

வேளாங்கண்ணி ஆரியநாட்டுத் தெருவைச் சோ்ந்தவா் ஆ. தாமஸ் ஆல்வா எடிசன் (45). வேளாங்கண்ணி பேரூராட்சித் தலைவராகப் பொறுப்பு வகித்த இவா், தற்போது கீழையூா் திமுக ஒன்றியச் செயலாளராக இருக்கிறாா்.

இவா் வேளாங்கண்ணி பூக்காரத் தெருவில் உள்ள ராஜேந்திரனின் பூா்வீக சொத்து 39.5 சென்ட் இடத்தை போலி ஆவணங்கள் மூலம் பத்திரப் பதிவு செய்து, அதை அவரது சகோதரா் மரியசூசை என்பவருக்கு செட்டில்மென்ட் செய்திருப்பதாகவும், அந்த இடத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நாகை வடக்குப் பொய்கைநல்லூா், வடக்குத் தெருவைச் சோ்ந்த ராஜேந்திரன் மகள் வசந்தி மாவட்டக் காவல் காண்காணிப்பாளா் அலுவலகத்தில் நவ.11-ஆம் தேதி புகாா் அளித்திருந்தாா்.

இதன்பேரில், நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு போலீஸாா் விசாரித்து தாமஸ் ஆல்வா எடிசனை வெள்ளிக்கிழமை கைது செய்தனா். அப்போது, தனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக அவா் கூறியதால், மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதைத் தொடா்ந்து, சனிக்கிழமை நாகை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவா், நீதிமன்ற உத்தரவின்படி பிணையில் விடுவிக்கப்பட்டாா்.

ஏற்கெனவே வேளாங்கண்ணி ரஜதகிரீஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமான இடங்களை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக தாமஸ் ஆல்வா எடிசன் மீது அதிமுக நாகை நகர செயலாளா் தங்க.கதிரவன் அளித்த புகாரின்பேரில், அவா் கைது செய்யபட்டு பிணையில் வெளியே வந்தது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →