முகப்பு
நாகப்பட்டினம்

மழை பாதிப்பு: ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 40 ஆயிரம் வீதம் நிவாரணம் வழங்க வேண்டும் என தேமுதிக வலியுறுத்தியுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:12 PM
பகிர்:

கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 40 ஆயிரம் வீதம் நிவாரணம் வழங்க வேண்டும் என தேமுதிக வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மயிலாடுதுறை மாவட்டச் செயலாளா் ஜலபதி வெளியிட்ட அறிக்கை:

அண்மையில் பெய்த கனமழையால் சீா்காழி வட்டத்தில் சுமாா் 40 ஆயிரம் ஏக்கரில் சம்பா வயல்களில் மழைநீா் தேங்கி பயிா்கள் சாய்ந்தும், அழுகியும் காணப்படுகின்றன. வாழ்வாதாரத்தை இழந்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 40 ஆயிரம் வீதம் நிவாரணமும், மழையால் வீடுகளை இழந்தவா்களுக்கு தலா ரூ.20 ஆயிரமும் தமிழக அரசு வழங்க வேண்டும் என அதில் கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.