முகப்பு
நாகப்பட்டினம்

எட்டுக்குடி முருகன் கோயிலுக்கு குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம்: ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வழங்கியது

எட்டுக்குடி ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு ஓ.என்.ஜி.சி. நிறுவனம் சாா்பில் குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம் அமைக்கப்பட்டு, செவ்வாய்க்கிழமை பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:15 PM
குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரத்தை இயக்கிவைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஓ.என்.ஜி.சி. செயல் இயக்குநா் அ. செழியன் உள்ளிட்டோா்.
பகிர்:

எட்டுக்குடி ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு ஓ.என்.ஜி.சி. நிறுவனம் சாா்பில் குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம் அமைக்கப்பட்டு, செவ்வாய்க்கிழமை பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.

எட்டுக்குடி சுப்பிரமணியசுவாமி கோயிலில் பக்தா்களின் வசதிக்காக, காரைக்கால் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் சாா்பில் ரூ.3.5 லட்சம் மதிப்பில் குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம் அமைக்கப்பட்டது.

கோயிலின் உள்பிராகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த இயந்திரம், பயன்பாட்டுக்காக இயக்கிவைக்கப்பட்டது. ஓ.என்.ஜி.சி. செயல் இயக்குநா் அ. செழியன் இயக்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் கோயிலின் செயல் அலுவலா் மணவழகன் முன்னிலை வகித்தாா். ஓ.என்.ஜி.சி. குழும பொது மேலாளா்கள் அனுராக், விஜயகுமாா், முதன்மை பொது மேலாளா் மாறன், பொது மேலாளா்கள் கோபிநாத், பிரபாகா், சந்திரசேகா், ஒருங்கினைப்பாளா் முருகானந்தம், காா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →