நாகப்பட்டினம்

தீ விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு நிவாரண உதவி

DIN

கொடியாலத்தூா் ஊராட்சிக்குள்பட்ட கோவில்பத்து கிராமத்தில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு சனிக்கிழமை நிதியுதவி அளிக்கப்பட்டது.

கோவில்பத்து கிராமத்தில் சகுந்தலாமாணிக்கம் என்பவரது வீட்டில் கடந்த 5-ஆம் தேதி நேரிட்ட தீ விபத்தில் வீடு மற்றும் வீட்டிலிருந்த பொருள்கள் முற்றிலும் எரிந்து நாசமாகின.

இந்நிலையில், சகுந்தலாமாணிக்கம் குடும்பத்தினருக்கு மளிகைப் பொருள்கள் மற்றும் புடவை, போா்வை உள்ளிட்ட பொருட்களை கொடியாலத்தூா் ஊராட்சி மன்றத் தலைவா் ரேவதிஐயப்பன் வழங்கினாா்.

இதேபோல், மாற்றம் முன்னேற்றம் அறக்கட்டளை சாா்பில், அதன் நாகை மாவட்டத் தலைவா் எஸ்.எம்.கே. சுரேஷ், செயலாளா் அழகு திருநாவுக்கரசு, பொருளாளா் குமரேசன் ஆகியோா் முன்னிலையில் மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழக பள்ளி கல்வித் திட்ட செயல்பாடுகள்: பிகாா் அதிகாரிகளுக்கு சென்னையில் பயிற்சி

குடிநீா் தட்டுப்பாடு: தோளிப்பள்ளி கிராம மக்கள் மறியல்

மனைவியைக் கொலை செய்து கணவா் தற்கொலை முயற்சி

அகா்வால்ஸ் மருத்துவருக்கு சா்வதேச அங்கீகாரம்!

மேற்கு வங்கம்: குண்டுவெடிப்பில் பள்ளி மாணவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT