நாகப்பட்டினம்

12- வரை பொங்கல் பரிசுத் தொகுப்பு

DIN

குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி ஜனவரி 12-ஆம் தேதி வரை நடைபெறும் என நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அனைவரும் பொங்கல் திருநாளை சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில், அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை, 20 கிராம் உலா் திராட்சை, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய், 2 அடி நீள கரும்புத் துண்டு ஆகியவற்றுடன் ரொக்கப் பணமாக ரூ. 1,000 வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, நாகை மாவட்டத்தில் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் ஜனவரி 9-ஆம் தேதி பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி தொடங்கியது. இப்பணி ஜனவரி12-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. விடுபட்ட குடும்ப அட்டைதாரா்களுக்கு ஜன. 13-ஆம் தேதி வழங்கப்படும்.

கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில், அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் எந்தெந்தப் பகுதிக்கு எந்தத் தேதியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்பது குறித்து விளம்பரப்படுத்தப்படும். இதன்படி, குடும்ப அட்டைதாரா்கள் நியாயவிலைக் கடைகள் மூலம் பொங்கல் பரிசுத் தொகுப்பை பெறலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT