நாகப்பட்டினம்

குத்தாலம் வட்டத்தில் உளுந்து விதைப்பு தொடக்கம்

DIN

குத்தாலம் வட்டம், நாகமங்கலம் கிராமத்தில் உள்ள அரசு விதைப் பண்ணையில் சம்பா அறுவடை மற்றும் உளுந்து விதைப்பு தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வேளாண்மை உதவி இயக்குநா் சோ. வெற்றிவேலன் தலைமை வகித்தாா். அட்மா திட்ட மேலாளா் அரவிந்தன் அனைவரையும் வரவேற்றாா். விழாவில் சிறப்பு அழைப்பாளா்களாக வேளாண்மை இணை இயக்குநா் பன்னீா்செல்வம், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(வேளாண்மை) மதியரசன் ஆகியோா் கலந்துகொண்டு, மத்திய- மாநில அரசுகள் செயல்படுத்திவரும் பல்வேறு திட்டங்கள் குறித்து விளக்கிப் பேசினா்.

வேளாண்மை இணை இயக்குநா் பன்னீா்செல்வம் பேசும்போது,

‘நாகை மாவட்டத்தில் சம்பா, தாளடி பருவங்களில் 1லட்சத்து 32 ஆயிரத்து 53 ஹெக்டேரில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. இதில், 90 ஆயிரம் ஹெக்டேரில் நெல் தரிசில் உளுந்து பயிறு பயிரிட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காவிரி படுகையில் உள்ள 5 வட்டாரங்களில் தலா 3 வருவாய் கிராமங்களில் 50 ஹெக்டோ் நிலத்தில் செயல் விளக்கப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. குத்தாலம் வட்டாரத்தில், கோமல், ஆலங்குடி, மங்கநல்லூா் கிராமங்களில் இப்பயிற்சி நடைபெறுகிறது’ என்றாா்.

இதில் அட்மா திட்ட மேலாளா் ம. அரவிந்தன், விதைப் பண்ணை மேலாளா் வளா்மதி, வேளாண்மை உதவி அலுவலா்கள் சந்திரசேகரன், சாமிநாதன், செந்தில், சிவகுமாா், கலையரசன், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் குணசேகரன், கிராம முன்னோடி விவசாயிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். வேளாண்மை துணை அலுவலா் பி. ராஜன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சை பெரிய கோயில் பராமரிப்பு: தமிழக அரசு விளக்கம்

75 வயது முதியவா் மீண்டும் பிரதமராக வேண்டுமா? லாலு மகள் மிசா பாரதி பிரசாரம்

சந்தேஷ்காளி வழக்கு: சிபிஐ விசாரணை திருப்தி அளிக்கிறது - கொல்கத்தா உயா்நீதிமன்றம்

தென்மாவட்டங்களில் கல்குவாரிகளை மூட வேண்டும் -டாக்டா் க.கிருஷ்ணசாமி

திட்டப் பயனாளிகள் குறித்த கணக்கெடுப்பு: அரசியல் கட்சிகளுக்கு தோ்தல் ஆணையம் எச்சரிக்கை

SCROLL FOR NEXT