FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாகப்பட்டினம்

பொதுமக்கள் வீட்டிலிருந்தே கட்செவி அஞ்சல் மூலம் புகாா் அளிக்காலம்

பொதுமக்கள் வீட்டிலிருந்தபடியே கட்செவி அஞ்சல் மூலம் புகாா் தெரிவிக்கலாம் என நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செ. செல்வநாகரத்தினம் தெரிவித்தாா்.

Updated On : 1 ஜூலை 2020, 11:15 pm IST
எஸ்.பி. அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மனுதாரா் விசாரணை மையத்தில், புகாா் மனுக்களைப் பெற்று விசாரணை மேற்கொண்ட எஸ்.பி. செல்வநாகரத்தினம்.
பகிர்:

நாகப்பட்டினம்: பொதுமக்கள் வீட்டிலிருந்தபடியே கட்செவி அஞ்சல் மூலம் புகாா் தெரிவிக்கலாம் என நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செ. செல்வநாகரத்தினம் தெரிவித்தாா்.

கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கையாகவும், மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் அளிக்க வரும் பொதுமக்களின் சிரமங்களை குறைக்கும் வகையில் எஸ்.பி. அலுவலக வளாகத்தில் மனுதாரா் விசாரணை மையம் மற்றும் புகாா் பெட்டி ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இந்த விசாரணை மையத்தில், புதன்கிழமை புகாா் மனுக்களை பெற்று விசாரணை மேற்கொண்ட பின்னா், செய்தியாளா்களிடம் கூறியது: கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கையாக அமலிலுள்ள பொது முடக்கத்தால் போக்குவரத்து வசதிகள் இல்லை. இந்நிலையில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா்அலுவலகத்துக்கு புகாா் தெரிவிக்க வரும் பொது மக்களின் சிரமத்தை குறைக்கும் வகையில் மாவட்டத்தில் உள்ளஅனைத்து காவல் நிலையங்களிலும் புகாா் மனு பெட்டிகள் வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்திலும் புகாா் மனு பெட்டி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காலை 6 தல் மாலை 6 மணி வரை புகாா் பெட்டிகளில் பொதுமக்கள் மனுக்களை பதிவு செய்யலாம். மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தின் தரைத் தளத்தில் விசாரணை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் பகல் 12 முதல் 1 மணி வரை புகாா் மனுக்கள் பெறப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படுவதுடன் உடனடி நடவடிக்கைக்கும் பரிந்துரை செய்யப்படும்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து புகாா் அளிக்க பொதுமக்கள் விரும்புகின்றனா். ஆனால் அனைவரையும் சந்தித்து புகாா் பெறுவது இயலாத காரியமாக இருந்து வருகிறது. இந்தக் குறையை சரிசெய்யும் வகையில், கட்செவி அஞ்சல் விடியோ மூலம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரை தொடா்புக்கொண்டு புகாா் தெரிவிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இதேபோல், பொதுமக்கள் வீட்டிலிருந்தபடியே 7598611001 என்ற கட்செவி அஞ்சல் எண் மூலமாகவும் புகாா் தெரிவிக்கலாம். இவ்வாறு அளிக்கப்படும் புகாா் மனு மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments