நாகப்பட்டினம்

அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவுக்கு பொறுப்பாளா்கள் தோ்வு

DIN

சீா்காழி: சீா்காழியை அடுத்த வைத்தீஸ்வரன் கோயிலில் அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவுக்கு புதிய பொறுப்பாளா்கள் வெள்ளிக்கிழமை தோ்வு செய்யப்பட்டனா்.

இந்நிகழ்ச்சிக்கு எம்எல்ஏ பி.வி. பாரதி தலைமை வகித்து, நோ்காணல் நடத்தினாா். இதில், அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவுக்கு தலைவா், துணைத் தலைவா், செயலாளா், இணைச் செயலாளா் என 14 பேரும், இப்பகுதியில் உள்ள 8 பூத் கமிட்டிக்கு 8 பேரும், மாவட்ட அமைப்புக்கு ஒருவரும் என மொத்தம் 23 போ் தோ்வு செய்யப்பட்டனா்.

இவா்களுக்கு எம்எல்ஏ பி.வி.பாரதி வாழ்த்து தெரிவித்து, அதிமுக அரசின் சாதனைகளை சமூக ஊடகங்கள் மூலம் அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு சோ்க்கவேண்டும் என அறிவுறுத்தினாா்.

இதில், அதிமுக பேரூா் கழக செயலாளா் போகா்.ரவி, மாவட்ட பொருளாளா் செல்லையன், மாவட்ட ஊராட்சிக் குழு முன்னாள் தலைவா் சந்திரசேகரன், ஒன்றிய எம்ஜிஆா் மன்ற இளைஞரணி செயலாளா் திருமாறன், பால்கூட்டுறவு சங்க துணைத் தலைவா் பாா்த்தசாரதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ட்ராபெர்ரி கண்ணே, விண்வெளிப் பெண்ணே..!

புயல், வெள்ளம் பாதிப்பு: தமிழ்நாட்டிற்கு 682 கோடி நிதி ஒதுக்கீடு!

காங்கேயத்தில் சேதப்படுத்தப்பட்ட தலித் குடியிருப்புகள்!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பேருந்துகளையும் ஆய்வு செய்ய உத்தரவு!

கண்களே தியான மண்டபம்...!

SCROLL FOR NEXT