நாகப்பட்டினம்

திருமாவளவன் குறித்து அவதூறு டிக் டாக் வெளியிட்ட இளைஞர் கைது

DIN

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குறித்து அவதூறு வீடியோ வெளியிட்ட இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். 

சீர்காழியை அடுத்த தேனூர் பகுதியைச் சேர்ந்த கவியரசன்(20). இவர் சில நாள்களுக்கு முன்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் புகைப்படத்தை வைத்துக் கொண்டு அவதூறாக கருத்து தெரிவித்து வீடியோ வெளியிட்டாராம். 

இதனை பார்த்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஒன்று திரண்டு தனி, தனியாக பல புகார்கள் அளித்தனர். இதில் மண்டல செயலாளர் வழக்கறிஞர் வேலு குபேந்திரன் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த சீர்காழி காவல்துறையினர் கவியரசனை கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT